Monday, September 28, 2009

அறிந்தேன்...

எனக்காக நீயும் உனக்காக நானும்
வாழ்கின்ற வாழ்க்கை
விநோதமானது...


என்னோடே என்றும் இருந்த போதிலும்,
இன்பத்திலும்,
துன்பத்திலும்,
நீமட்டுமே எனக்காக் இருக்கிறாய் என்று...


எனது வெற்றி தோல்வி - இரண்டிலும்
நீ என்றுமே இருக்கிறாய் என்று...

எவரும் துணை இல்லாதபோதும்,
சற்றும் யோசிக்காமல்,
நீ மட்டுமே வருவாய் என்று...


எத்தனை உறவுகள் வந்த போதும்,
எங்கெங்கோ தேடி அலைந்த போதும்,

சிறிய பகலையும்,
நீண்ட இரவையும்,
எப்போதும் நிறைத்து கொண்டே இருக்கும் உன்னை...
எங்ஙனம் அறியாமல் போனேன்...?
"கண்ணீரே..."
நீயே என் உயிர் தோழன் என்று...!!!


என் கன்னங்கள் வந்து பொழியும் முத்த மழையே -
அதையும் மீறும் உறவே...
உனக்கான அஞ்சலி இது...

இரங்கல் அஞ்சலி அல்ல -
நன்றியின் வெளிப்பாடு...

1 comment:

Manikandan Eswaran said...

jayy kalakeeteega..super super.